Friday, July 4, 2008

ஆத்திகமில்லாமல்...

மருத்துவனால் முடியாத
நோய்களை குணமாக்க
பூஜிக்கும் குருக்களுக்கு
பிரசங்கிக்கும் பாதிரிக்கு
தூபங்காட்டும் ஹாஜிக்கு
இவர்களுக்கு
வசூல் செய்துதர
பூட்டிய
கதவுகளுக்குப்பின்னால்
புன்னகைத்தபடி
கடவுள்கள்...

No comments: